முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:21 AM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக  தமிழகத்தில் பரவலாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 9.30 வரை)  திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, தேனி உள்ளிட்ட மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருநெல்வேலி தென்காசி, மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →