முகப்பு
தமிழ்நாடு

ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் வெங்கிடரமணன் காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிடரமணன் சென்னையில் இன்று காலமானார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:22 AM
கோப்புப் படம்.
பகிர்:

உடல்நலக்குறைவு காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிடரமணன் சென்னையில் இன்று காலமானார். 

அவருக்கு வயது 92 ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் 18வது ஆளுநராக பதவி வகித்தவர் எஸ் வெங்கிடரமணன். இவர் 1990 ஆம் ஆண்டில் இருந்து 1992 ஆம் ஆண்டு வரை ஆளுநராக இருந்தார். 

மேலும் 1985 ஆம் ஆண்டு முதல் 1989 வரை மத்திய நிதித்துறை செயலாளராகவும், கர்நாடக அரசின் ஆலோசகராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மறைந்த வெங்கிடரமணனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 

Advertisement

அதில் ஒருவர் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments