முகப்பு
தமிழ்நாடு

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:23 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.

மேலும், ஏற்கெனவே அறிவித்தப்படி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நாளை(நவ.21) மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →