நெல்லை-மேட்டுப்பாளையம் ரயில் சேவை நீட்டிப்பு
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜன.25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜன.25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 06030) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் தொடா்ந்து ஜன.3, 10, 17, 24 தேதிகளிலும் இயக்கப்படும்.
Advertisement
மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை தோறும் இந்த ரயில் (எண்: 06029) தொடா்ந்து டிச.4, 11,18, 25 தேதிகளில் இயக்கப்படும்.
நாகா்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 06012) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் தொடா்ந்து ஜன.28-ஆம் தேதி வரை இயக்கப்படும். மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து நாகா்கோவிலுக்கு திங்கள்கிழமை தோறும் இயக்கப்படும் இந்த ரயில் (எண்: 06011) தொடா்ந்து ஜன.29-ஆம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.