தமிழ்நாடு

திருப்பதியில் அக்.15 முதல் நவராத்திரி பிரம்மோற்சவம்!

DIN

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் வருகிற 15-ம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. 

திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் 9 நாள்கள் நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா அக்.15-ம் முதல் 23-ம் தேதி வரை நிகழ உள்ளது. 

முன்னதாக, கடந்த செப்டம்பர் 18 முதல் 26 வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 

புரட்டாசி மாதம் நடைபெற்று வருவதால் ஏற்கனவே திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துவரும் நிலையில், 3வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அக்.6, 7, 8, 13, 14, 15 ஆகிய தேதிகளில் சர்வ தரிசன டோக்கன்கள் நிறுத்திவைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

நவராத்திரி பிரம்மோற்சவத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தேவஸ்தானம் செய்து வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்ல்ஸனை வீழ்த்தினாா் பிரக்ஞானந்தா

நாட்டின் வனப் பாதுகாப்பு கடந்த 15 ஆண்டுகளில் முன்னேற்றம்

29 முறை எவரெஸ்ட்டை எட்டி சாதனை படைத்த கமி ரீட்டா

நாகை-இலங்கை கப்பல் சேவை: மே 17-ஆம் தேதிக்கு மாற்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT