தமிழ்நாடு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 13 பேர் பலி

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் பலியாகினர்.

DIN


சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 

எம்.புதுப்பட்டியை அடுத்த ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்து நிகழ்ந்த அறையில் 15 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தயாரித்த பட்டாசுகளை பரிசோதித்து பார்த்தபோது, இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில்  தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வாழ்வைக் காதலிக்கிறேன்... எடின் ரோஸ்!

ரஜினி 173 படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

மெக்ஸிகோவில் GenZ போராட்டம்: காவல் துறையினருடன் மோதல்!

உதயநிதிக்கு ஆணவம் வேண்டாம்! - தமிழிசை

Big fan bro! சிம்புவின் இன்ஸ்டா பதிவு!

SCROLL FOR NEXT