தமிழ்நாடு

பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

DIN

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

ஆன்மிகத்தில் பங்காரு அடிகளாரின் சேவையைப் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  திபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு
வழங்கி வந்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார். 

கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய
வேண்டும் என்பதற்காக தி.மு.க பல ஆண்டுகளாகப் போராடி, அதனை
நடைமுறைப் படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளார் ஆன்மிகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத் தக்கது.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார், தற்போது
மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். 

பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு
மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனம் ஆவின்: தமிழ்நாடு அரசு

பனிவிழும் மலர்வனம் தொடரின் ஒளிபரப்பு நேரம்!

மேற்கு வங்க ரயில் விபத்துக்கு முக்கிய காரணம் இதுதான்: அதிர்ச்சி தகவல்!

பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம்!

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் அசத்திய செய்யறிவு தொழில்நுட்பம்!

SCROLL FOR NEXT