முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 நாள்களில் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை!

வடகிழக்குப் பருவமழை 2 நாள்களில் தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:11 AM
பகிர்:

வடகிழக்குப் பருவமழை 2 நாள்களில் தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்தியப் பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 2 தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் துவங்கக்கூடும். வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலுக் குறைந்து காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →