அடுத்த 2 நாள்களில் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை!
வடகிழக்குப் பருவமழை 2 நாள்களில் தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை 2 நாள்களில் தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்தியப் பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 2 தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் துவங்கக்கூடும். வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலுக் குறைந்து காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: 12 ராசிக்கான வாரப் பலன்கள்!
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.