ஒரத்தநாடு: ஒரத்தநாடு வட்டம் உஞ்சிய விடுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் முதன் செயலாளர் உஞ்சை அரசன் (69) உடல் நலக்குறைவின் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.
ஒரத்தநாடு வட்டம் உஞ்சியவிடுதியை சேர்ந்தவர் உஞ்சை அரசன் (69). இவர் விசிக-வின் முதன்மை செயலாளராக இருந்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். அவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
அவரின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான உஞ்சை விடுதி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (அக்.25) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 7010820325
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.