தமிழ்நாடு

மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் தலைமறைவு

சந்தேகத்தின் பேரில் மனைவி அம்பிகாபதியை வீட்டு வாசலில் வெட்டி கொலை செய்துவிட்டு கணவர் லட்சுமணன் தலைமறைவாகியுள்ளார்.

DIN

சந்தேகத்தின் பேரில் மனைவி அம்பிகாபதியை வீட்டு வாசலில் வெட்டி கொலை செய்துவிட்டு கணவர் லட்சுமணன் தலைமறைவாகியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், குமரன் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (45). இவர் விளாத்திகுளத்தில் உள்ள  உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்பிகாபதி (40). இவர் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தில் ரேஷன் கடை ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு சிவ பெருமாள் (13) என்ற மகனும், மகாலட்சுமி (11) மகளும் உள்ளனர்.

இந்நிலையில் அம்பிகாபதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது  லட்சுமணனுக்கு தெரிய வரவே கணவன் மனைவி இருவருக்கும்  இடையே சந்தேகத்தின் பேரில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் இன்று நண்பகலில்  தம்பதியர் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கணவர் லட்சுமணன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி அம்பிகாபதியை வீட்டு வாசலின் அருகே  விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையிலான  காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட அம்பிகாபதியின் சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக விளாத்திகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து தலைமறைவான லட்சுமணனை  தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

ஜன நாயகனில் புஸ்ஸி ஆனந்த்?

அமித் ஷாவுடன் சி. பி. ராதாகிருஷ்ணன் ஆலோசனை!

15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

SCROLL FOR NEXT