முகப்பு
தமிழ்நாடு

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா பத்தாம் நாள் தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை ஆவணித்திருவிழா பத்தாம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:56 AM
பகிர்:

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை ஆவணித்திருவிழா பத்தாம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

இந்த திருக்கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை (ஆக.23) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியருளினார். 

Advertisement

நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 6 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரத வீதி வழியாக வலம் வந்தது. 

நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், பணியாளர்கள் ராஜ்மோகன், ஆவுடையப்பன், செல்வகுத்தாலம், பால்ராஜ், மாரிமுத்து, மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து திருத்தேர் இழுத்தனர். பாதுகாப்புப் பணியில் காவல்துணைக்கண்காணிப்பாளர் மு.வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர் ஈடுபட்டனர்.

திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments