முகப்பு
தமிழ்நாடு

மதுரைக்கு மெட்ரோ.. பேரம் பேசுவது மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? - ஸ்டாலின்

மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவது மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளதைப் பற்றி...

Updated On : 7 ஏப்ரல், 2026 at 5:41 AM
தேவேந்திர ஃபட்னவீஸ் - ஸ்டாலின்.
பகிர்:

மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் விடியோவை மறுபதிவிட்டு, கேள்வியெழுப்பியுள்ளார்.

அந்தப் பதிவில், “பா.ஜ.க. எம்.எல்.ஏ-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?

Advertisement

அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதல்வர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா?

தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திமுக ஆளும் தமிழ்நாடுதான் இரட்டை இலக்க (Double Digit) பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க... காலில் விழுந்து ஆசி பெறுவது தமிழர்களின் பண்பாடு: உதயநிதிக்கு இபிஎஸ் பதில்!

summary

Chief Minister Stalin has raised the question: "Is it the job of the Maharashtra Chief Minister Devendra Fadnavis to bargain by promising to provide a Metro for Madurai?"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments