மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி!
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக..
மகாராஷ்டிர துணை முதல்வரும், சிவசேனை கட்சித் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே கடந்த சில நாள்களாக சளி மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று தாணேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைரஸ் காய்ச்சலுக்கான சிகிச்சையை அவர் மேற்கொண்டு வருவதாகவும், கட்டாய ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement
சிகிச்சை மேற்கொண்டுவரும் அவர் இன்று அல்லது நாளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Maharashtra Deputy Chief Minister Eknath Shinde has been admitted to a hospital in Thane after suffering from a bout of viral fever and cold, an official said on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.