நள்ளிரவில் வழி தவறிய மம்மூட்டிக்கு 10 கிமீ வரை பைக்கில் உதவிய தமிழர்..! வைரலாகும் காட்சிகள்!
கேரளத்துக்கு வழி தெரியாமல் இருந்த நடிகர் மம்மூட்டிக்கு உதவிய தமிழர் பாண்டியன் குறித்து...
நடிகர் மம்மூட்டி நள்ளிரவில் கேரளத்துக்குச் செல்ல வழி தெரியாமல் அலைந்துகொண்டிருந்தபோது, பாண்டியன் என்ற தமிழர் உதவியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் மம்மூட்டி தற்போது கேரள - தமிழக எல்லையில் புதிய படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்தப் படத்தை தலைவர் தம்பி தலைமையில் பட இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் காரைக்குடி அருகே நடைபெற்று வந்துள்ளது. படப்பிடிப்பு நள்ளிரவில் முடிவடைந்ததும் கேரளத்துக்குச் செல்ல மம்மூட்டி முடிவெடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
கூகுள் மேப் உதவியுடன் கேரளத்துக்குச் சென்றுகொண்டிருந்த மம்மூட்டிக்கு திருப்பத்தூர் பகுதியில் சில இடங்களில் சாலை அடைக்கப்பட்டிருந்ததால் வழித்தவறியுள்ளார். பின்னர், தங்கியிருந்த விடுதிக்கே செல்ல முடிவெடுத்துள்ளனர்.
சுமார் அதிகாலை 3.30 மணியளவில் போகும் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே ஒருவரிடம் விசாரிக்க, அங்கு ஒருவர் தனது பைக்கில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் வந்து மெயின் ரோடு வரைக்கும் விட்டுள்ளார். இந்தப் பயணத்தில் நடிகர் மம்மூட்டியுடன் தயாரிப்பாளர், கார் ஓட்டுநர் என பலர் இருந்துள்ளனர்.
பின்னர், பிரதான சாலை வரை வந்து வழியனுப்பியவரிடம் மமூட்டி பெயரைக் கேட்டுள்ளார். அவரது பெயர் பாண்டியன் எனக் கூறியுள்ளார். அதற்கு மம்மூட்டி, “ எனது நண்பன்” எனக் கூறியுள்ளார். இந்த விடியோவை ஆண்டோ ஜோசப் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மம்மூட்டிக்கு உதவிய பாண்டியன் என்பவரும் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளார்.
A Tamil man helped Mammootty—who had lost his way at midnight—by escorting him for 10 km on a bike! The visuals are going viral!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.