சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் மழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், வானகரம், பூவிருந்தவல்லி, திருவேற்காடு, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
பிற்பகல்முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.