கோப்புப்படம் 
தமிழ்நாடு

கடலூர் மாவட்டம் சாலைவிபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

கடலூர் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் அருகே சாலை விபத்தில் இறந்த சக்திவேலின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

DIN


கடலூர் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் அருகே சாலை விபத்தில் இறந்த சக்திவேலின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், மோவூர் மேற்கு கிராமம், பிரதான சாலையில் சனிக்கிழமை (செப்.2) இரவு முட்டம் கிராமத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும், காட்டுமன்னார்கோயிலில் இருந்து சென்ற நான்கு சக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதி ஏற்பட்ட விபத்தில் கடலூர் மாவட்டம், முட்டம் கிராமத்தைச் சேர்ந்த ம.சக்திவேல்(25) சம்பவ இடத்திலேயே இறந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

இறந்த சக்திவேல் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அஜித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்திரவிட்டுள்ளேன் என்று அவா் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT