புரட்டாசி மாத பிறப்பையொட்டி மீன் சந்தையில் குவிந்த மக்கள்!
சென்னை காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, வானகரம் மீன் சந்தையில் அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
புரட்டாசி மாதம் நாளை பிறக்கவுள்ள நிலையில், கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப். 17) மீன் சந்தைகளில் அதிகாலை முதலே அதிக அளவிலான மக்கள் குவிந்துள்ளனர்.
புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதால், இன்று அசைவம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், மீன்களின் விலை சற்று உயர்ந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
சென்னை காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, வானகரம் மீன் சந்தையில் அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதேபோன்று கடலூர், நாகை மீன்பிடி துறைமுகத்திலும் அதிகாலை 3 மணிமுதலே அதிக அளவில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
Advertisement
Advertisement
மழைக்காலங்களில் மீன்பிடிக்க கடலுக்கு மீனவர்கள் செல்வதும் குறையும். இதனால் புரட்டாசி மாதத்தில் மீன்களின் வரத்தும் வெகுவாகக் குறையும் என்பதால், பிடித்த மீன்களை விற்பனை செய்வதில் மீனவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.