முகப்பு
தமிழ்நாடு

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து தாய்,மகன் உள்பட 3 பேர் பலி

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் மற்றும் உறவினர் என 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:47 AM
பகிர்:


தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் மற்றும் உறவினர் என 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரியமங்கலம் அருகே ஓடைச்சக்ரை பகுதியில் வீட்டின் அருகே துணிகளை உலர்த்தும் கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் இருந்து தாய் மாதம்மாள்(60)ஷ காப்பாற்றச் சென்ற அவரது மகன் பெருமாள் (33) மற்றும் உறவினர் சரோஜா(60) என மூவரும் அடுத்தடுத்து பலியாகினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 3 பேரின் உடல்களை மீட்டு உடல் கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தருமபுரியில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →