முகப்பு
தமிழ்நாடு

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட  சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:29 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட  சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரையில் தெரிவித்திருப்பதாவது:

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன் என்று தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உத்தரவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →