சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூச்சலிட்ட 100 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் கூச்சலிட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:09 AM
சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் கூச்சலிட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கூடி கூச்சலிட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த மெட்டல் டிடெக்டர்களை சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர், கூச்சலிட்ட 100 மாணவர்கள் மீது ரயில்வே சட்டத்தின் 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
மாணவர்கள் கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.