முகப்பு
தமிழ்நாடு

சென்னை சிபிசிஐடி அலுவலகக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து!

சென்னை சிபிசிஐடி அலுவலகக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 1 ஜூன், 2023 at 4:36 PM
பகிர்:

சென்னை சிபிசிஐடி அலுவலகக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை பெருநகர தலைமை சிபிசிஐடி தலைமை அலுவலகம் பழைய கமிஷ்னர் அலுவலகம் அருகில் உள்ளது. சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் உள்ள மொட்டை மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதனை சிபிசிஐடி வளாக காவலர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். பின்னர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயணைப்பு துறையினட் தீயை அணைக்க விரைந்து  வந்தனர்.

Advertisement

நான்காவது தளத்திற்கு மேல் உள்ள மொட்டை மாடியில்  ஏற்பட்ட தீ விபத்தானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் கூறப்படுகிறது.

மேலும், சிபிசிஐடி காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.