முகப்பு
தமிழ்நாடு

இன்று 3 மாவட்டங்களில் கனமழை! நவ. 27ல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற நவம்பர் 27 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:25 AM
கோப்புப்படம்
பகிர்:

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற நவம்பர் 27 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவ. 29 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கூறியுள்ளது. 

மேலும் இன்று(வெள்ளிக்கிழமை) திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை(சனிக்கிழமை) கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்

அடுத்த 7 நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தெற்கு அந்தமான் கடல் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →