கோப்புப்படம் 
தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகின்றது.

மக்களவைத் தேர்தல் நடைபெறும் வரும் ஏப். 19 ஆம் தேதி பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த மக்களவைத் தோ்தலில் 8 ஆயிரத்து 231 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தெரிகிறது.

வாக்குப்பதிவின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் பொருத்தப்பட்ட இரும்பு ஷட்டா்கள்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

SCROLL FOR NEXT