தமிழ்நாடு

ஜெ.பி. நட்டா வாகனப் பேரணி தொடக்கம்!

இரவு 8 மணிக்குள் வாகனப் பேரணியை நடத்தி முடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Manivannan.S

பாஜக தேசிய செயலாளர் ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணி திருச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து வாகனப் பேரணி நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்துக்கு வந்துள்ள ஜெ.பி. நட்டா, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

காலையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பி.கார்த்தியாயினியை ஆதரித்து அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமமுக வேட்பாளரை ஆதரித்து வாகனப் பேரணி நடத்துகிறார். வாகனப் பேரணி செல்லும் ஜெ.பி. நட்டாவுக்கு இரு வழியிலும் தொண்டர்கள் நின்று உற்சாக வரவேற்பளித்தனர்

இரவு 8 மணிக்குள் வாகனப் பேரணியை நடத்தி முடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கண்ணப்பா உணவகத்திலிருந்து உறையூர் நாச்சியார் கோவில் வரை வாகனப் பேரணி நடைபெறவுள்ளது.

ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணியையொட்டி அப்பகுதிகளில் 300-க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT