பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார்? ஜன. 20-ல் அறிவிப்பு
பாஜகவின் தேசிய தலைவருக்கான தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
பாஜகவின் தேசிய தலைவருக்கான தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் தேசிய தலைவராக தற்போது ஜெ.பி. நட்டா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஏற்கெனெவே முடிவடைந்து விட்டது. இருப்பினும், பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் காரணங்களால் ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, பாஜக தேசிய தலைவர் விவகாரத்தில் காங்கிரஸும் விமர்சனம் செய்தது.
இந்த நிலையில், பாஜக தேசிய தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற திங்கள்கிழமையில் (ஜன. 19) மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு மீதான பரிசீலனை 4 மணி முதல் 5 மணிவரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையில் (ஜன. 20) தேர்தல் நடத்தப்பட்டு, அன்றைய நாளிலேயே பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார் என்பது அறிவிக்கப்பட்டு விடும். இந்தத் தேர்தலை நடத்துவதற்காக கே. லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தற்போது பாஜகவின் தேசிய செயல் தலைவராக இருந்துவரும் நிதின் நபினே தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், இவருக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெ.பி. நட்டாவும் தேசிய செயல் தலைவராக இருந்து, பின்னர் பாஜக தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
BJP to announce new party president on January 20, Nitin Nabin To Take Top Seat
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.