தமிழ்நாடு

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மடிக்கணினி: இபிஎஸ்

DIN

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மடிக்கணினித் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக தேனியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட மடிக்கணினி திட்டம் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்பு தொடரும். மாணவ, மாணவியருக்கு 52 லட்சம் மடிக்கணினிகள் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டன.

பாஜக குறித்து டிடிவி தினகரன் பேசிய காட்சிகளை திரையிட்டு காட்டி, பச்சோந்தி வேட்பாளர் டிடிவி தினகரன். அவரை புறக்கணிக்க வேண்டும்.

விவசாயிகளையும் விவசாயத்தையும் அரவணைத்து சென்றது அதிமுக அரசுதான்.

கடவுளைப் போல் வணங்கப்படும் பென்னி குயிக்கிற்கு மணிமண்டபம் கட்டியவர் ஜெயலலிதா.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக அரசு சட்டப்போராட்டம் நடத்தி அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தது

திமுக ஆட்சியில் அரிசி விலை உயர்ந்துவிட்டது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

கெங்கவல்லி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு!

போலி முதலீட்டு இணையதளம்: ரூ.23 லட்சம் இழந்த பெண்!

SCROLL FOR NEXT