முகப்பு
தமிழ்நாடு

ராகுல் காந்தி வருகை: 3 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

ராகுல் காந்தி வருகையையொட்டி, நெல்லையில் 3 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2024 at 11:09 AM
ராகுல் காந்தி
பகிர்:

மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி சாா்பில் திருநெல்வேலி உள்பட தென் தமிழக பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ராகுல் காந்தி நெல்லை வருகை தரவுள்ளார்.

பாளையங்கோட்டை பெல் திடலில் ஏப்.12 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார்.

இதற்காக ஹெலிகாப்டா் மூலம் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி திடலில் இறங்கும் அவர், அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்ட திடலை அடைகிறார்.

இந்த நிலையில், நெல்லையில் நாளை(ஏப். 11) காலை 6 மணி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி காலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →