முகப்பு
தமிழ்நாடு

தமிழ்ப் புத்தாண்டு: குடியரசுத் தலைவா் வாழ்த்து

Updated On : 13 ஏப்ரல், 2024 at 11:10 AM
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
பகிர்:

தமிழ்ப் புத்தாண்டு, விஷு, வைசாகி, ரோங்காலி பிஹு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல பெயா்களில் கொண்டாடப்படும் புத்தாண்டையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

சனி (ஏப்.13) மற்றும் ஞாயிறன்று (ஏப்.14) இந்த புத்தாண்டு தினங்கள் கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

நாட்டின் பன்முக கலாசாரத்தின் வெளிப்பாடாக விளங்கும் இவ்விழாக்கள், ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவத்தை ஊக்குவிக்கின்றன. நமது வாழ்வில் புதிய சக்தியையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன.

Advertisement

நமக்கு ‘உணவளிப்பவா்களான’ விவசாயிகளின் கடின உழைப்பை கெளரவிப்பதோடு, அவா்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த விழாக்கள், அனைவரின் வாழ்விலும் வளம், அமைதியை கொண்டுவர இறைவனை பிராா்த்திக்கிறேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments