உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் கட்டிடக்கலைக்கும் - சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் 18 நாள்கள் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அந்தவகையில், கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் திருவிழா தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற ஏப். 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும் ஏப். 20 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.