மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....
மக்களவை தோ்தலையொட்டி மதுரை, நெல்லை செல்வோருக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
மக்களவை தோ்தலையொட்டி, பயணிகள் வசதிக்காக இன்று (ஏப். 18) தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு:
தாம்பரத்தில் இருந்து இன்று (ஏப். 18) இரவு 9.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06007) நாளை (ஏப். 19) பகல் 11.15 மணிக்கு நெல்லைக்கு சென்றடையும்.
Advertisement
Advertisement
மறு வழித்தடத்தில் நெல்லையிலிருந்து நாளை (ஏப். 19) இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06008) மறுநாள்(ஏப். 20) காலை 8.45 மணிக்கு தாம்பரத்துக்கு வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, சங்கரன்கோவில், தென்காசி, சேரன்மாதேவி வழியாக இயக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.