தமிழ்நாடு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

DIN

தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமன்றி முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று( ஏப். 19) நடைபெறும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் திருவான்மியூரில் மாநகராட்சிப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு 6.45 மணிக்கே வருகை தந்தார்.

சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடன், நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT