தமிழ்நாடு

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர் பள்ளத்தில் சிக்கியது.

DIN

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 7.05 மணிக்கு வடம் பிடித்து தொடங்கப்பட்டது.

இத்தேர் முற்பகல் 10.30 - 10.45 மணியளவில் சாரங்கபாணி தெற்கு வீதிக்கு வந்தபோது திடீரென இடது புற சக்கரம் ஏறக்குறைய 5 அடி ஆழத்துக்கு திடீரென உள்வாங்கியது.

இதைத்தொடர்ந்து பள்ளத்தில் மணல், ஜல்லிக் கற்கள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு தேர் சக்கரத்தை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்பள்ளத்தில், குடிநீர் உந்து சக்தி நிலையத்துக்கான குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அண்மையில் பள்ளம் தோண்டப்பட்டு சீர் செய்யப்பட்டது. அதன் பிறகு பள்ளம் சரியாக மூடப்படாத நிலையில், அதன் மீது வந்த தேர் உள்வாங்கியதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் தேரோட்டம் சுமார் 2 மணிநேரம் தடைப்பட்டுள்ளது.

படவிளக்கம்: கும்பகோணம் சாரங்கபாணி தெற்கு வீதியில் பள்ளத்தில் சிக்கிய தேர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

பொன்மேனி உருகுதே... அங்கிதா சர்மா!

3-வது முறையாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகும் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT