சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) எழும்பூரிலிருந்து இயக்கப்படும்.
தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூா் ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) இரவு 10.35 முதல் திங்கள்கிழமை (ஆக.19) அதிகாலை 4.35 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரங்களில் கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் இருமாா்க்கத்திலும் எழும்பூரிலிருந்து இயக்கப்படும்.
ரயில்கள் ரத்து: இதுதவிர ஆக.18-இல் இரவு 10 , ஆக.19-இல் அதிகாலை 4.15 மணிக்கு கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்களும், மறுமாா்க்கமாக ஆக.18-இல் இரவு 11.35, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.