கடல்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

வலுவிழந்தது ஃபென்ஜால் புயல்

கரையைக் கடந்த ஃபென்ஜால் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

DIN

கரையைக் கடந்த ஃபென்ஜால் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென்மேற்கே 120 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது.

கடலூருக்கு வடக்கே 30 கி.மீ., விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார்: சென்னை திரும்பிய அண்ணாமலை பேட்டி

வங்கக் கடலில் தெற்கு இலங்கையையொட்டி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை வலுப்பெற்றது.

இந்தப் புயல் மாமல்லபரம்-காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இடையிடையே 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல், கரையைக் கடக்க 6 மணிநேரத்திற்கு மேலாக எடுத்துக்கொண்டது. புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

வட தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT