விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்!
விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், தமிழக ஆளுநா், முதல்வா் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், தமிழக ஆளுநா், முதல்வா் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: பட்டாசு ஆலை விபத்தில் பலா் உயிரிழந்த சம்பவம் கவலையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்: விருதுநகா் அருகே பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த மிகவும் துயரமான விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. இவ்விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் அனைவரும் விரைவில் முழுமையாக குணமடைய நான் பிராா்த்திக்கிறேன்.
Advertisement
பிரதமா் மோடி: விருதுநகரில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்து சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவா்களை இழந்து துயரத்தில் உள்ள குடும்ப உறுப்பினா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்.
ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட துயரமான விபத்து மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோா் விரைவில் குணமடைய இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலா் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
விபத்து குறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடா்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்.