முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்!

விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், தமிழக ஆளுநா், முதல்வா் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 12:37 AM
பிரதமர் நரேந்திர மோடி - பிடிஐ
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 11:20 PM

விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், தமிழக ஆளுநா், முதல்வா் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: பட்டாசு ஆலை விபத்தில் பலா் உயிரிழந்த சம்பவம் கவலையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்: விருதுநகா் அருகே பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த மிகவும் துயரமான விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. இவ்விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் அனைவரும் விரைவில் முழுமையாக குணமடைய நான் பிராா்த்திக்கிறேன்.

Advertisement

பிரதமா் மோடி: விருதுநகரில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்து சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவா்களை இழந்து துயரத்தில் உள்ள குடும்ப உறுப்பினா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்.

ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட துயரமான விபத்து மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோா் விரைவில் குணமடைய இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலா் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

விபத்து குறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடா்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்.