புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தபோது புதுச்சேரியில் கனமழை பெய்தது. அங்கு பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு நிவாரணங்களை முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்தார்.
இதையும் படிக்க | எச்சரிக்கை! ஒகேனக்கல், சிறுவாணி அணை செல்வோர் கவனத்துக்கு...
அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 5,000 வழங்கப்படும்.
புதுச்சேரியில் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்தயடுத்து நால்வரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
மேலும் கனமழையால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ. 40,000, ஆட்டிற்கு ரூ. 20,000,
சேதமடைந்த படகு ஒன்றுக்கு ரூ. 10,000, முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 20,000, விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.