கோப்புப்படம். 
தமிழ்நாடு

மும்பை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி இணைப்பு

தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படவுள்ளது.

Din

தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - மும்பை இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் (எண்: 22159/22160) ஏசி இரண்டடுக்குப் பெட்டிகள் 2, ஏசி மூன்றடுக்கு எக்கனாமி பெட்டிகள் 7, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 2, பொதுப் பெட்டிகள் 3 ஆகியவற்றைக் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் டிச. 20-ஆம் தேதி முதல் ஒரு ஏசி மூன்றடுக்கு எக்கனாமி பெட்டி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படும்.

இதேபோல், காரைக்கால் - மும்பை விரைவு ரயில் (எண்: 11017/11018), கோவை - மும்பை விரைவு ரயில் (எண்: 11013/11014), சென்னை சென்ட்ரல் - மும்பை விரைவு ரயில்கள் (எண்: 22179/22180, 12163/12164), மதுரை - மும்பை விரைவு ரயில் (எண்: 22101/22102), கொச்சுவேலி - மும்பை விரைவு ரயில் (எண்: 22113/22114) ஆகியவற்றில் ஒரு ஏசி மூன்றடுக்கு எக்கனாமி பெட்டி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT