மும்பை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி இணைப்பு
தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - மும்பை இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் (எண்: 22159/22160) ஏசி இரண்டடுக்குப் பெட்டிகள் 2, ஏசி மூன்றடுக்கு எக்கனாமி பெட்டிகள் 7, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 2, பொதுப் பெட்டிகள் 3 ஆகியவற்றைக் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்த ரயிலில் டிச. 20-ஆம் தேதி முதல் ஒரு ஏசி மூன்றடுக்கு எக்கனாமி பெட்டி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படும்.
இதேபோல், காரைக்கால் - மும்பை விரைவு ரயில் (எண்: 11017/11018), கோவை - மும்பை விரைவு ரயில் (எண்: 11013/11014), சென்னை சென்ட்ரல் - மும்பை விரைவு ரயில்கள் (எண்: 22179/22180, 12163/12164), மதுரை - மும்பை விரைவு ரயில் (எண்: 22101/22102), கொச்சுவேலி - மும்பை விரைவு ரயில் (எண்: 22113/22114) ஆகியவற்றில் ஒரு ஏசி மூன்றடுக்கு எக்கனாமி பெட்டி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.