நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை தங்களது கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று மதிமுக தெரிவித்துள்ளது.
மக்களவைத் தோ்தலையொட்டி திமுக - மதிமுக கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டபேச்சுவாா்த்தை சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் திமுக சார்பில் தொகுதிப் பங்கீட்டு குழுவும், மதிமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்கு பின் மதிமுக நிர்வாகிகள் அளித்த பேட்டியில், நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை எங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம். 2 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களை திமுகவிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த முறை ஈரோடு தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை மதிமுகவுக்கு திமுக வழங்கியது. ஆனால் இம்முறை அக்கட்சி கூடுதலாக ஒரு மக்களவைத் தொகுதியை திமுகவிடம் கேட்டுள்ளது. மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
முன்னதாக இன்று காலை திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தொடர்ந்து மதிமுகவுடனும் தனது முதற்கட்டபேச்சுவாா்த்தையில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.