ஆவடி, பரந்தூர் மெட்ரோ: திட்ட அறிக்கைக்கு டெண்டர்!
கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ. தொலைவுக்கும், பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வழியாக பரந்தூர் வரை 50 கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோ ரயில் பாதை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
இந்த டெண்டரில் போட்டியிடும் நிறுவனங்கள் வருகின்ற 28ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.