தமிழ்நாடு

விமான நிலையத்தில் ரூ. 1. 57 கோடி வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 1. 57 கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

விக்கி ஜகதீஷ் பாட்டியா என்ற பயணியின் கைப் பைகளை பாதுகாப்புப் பரிசோதனையின் போது, ​​மும்பைக்குச் சென்ற சிஐஎஸ்எஃப் பணியாளர்கள், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பயணி தனது கைப்பையை பரிசோதனைக்கு வைத்தபோது, ​​உதவி காவல் ஆய்வாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர், பயணியை உடல் பரிசோதனைக்கு அனுப்பினார்.

விரிவான சோதனையில், ​​மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சி வருமான வரி புலனாய்வு மற்றும் விமான புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கரன்சியின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 57 லட்சம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT