சென்னையின் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை புகைமூட்டம் நிலவி வருகிறது. வாகனோட்டிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தில்லி மற்றும் சென்னையில் நிலவி வருகிற வானிலை காரணமாக, பார்வைத் தூரம் தெளிவாக இல்லாததால் விமான சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மோசமான வானிலை காரணமாக, தில்லி மற்றும் சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பயணிகள் விமானத்தின் சேவை குறித்த நிலையை விமான நிலையத்துக்கு செல்லும்முன் சோதிக்குமாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.