நுழைவுத் தேர்வு தகுதியை முடிவு செய்யாது: அனில் சீனிவாசன்
ஒரு நுழைவுத் தேர்வு மாணவர்களின் கல்வித் தகுதியை முடிவு செய்யாது என்று எழுத்தாளர் அனில் சீனிவாசன் தெரிவித்தார்.
ஒரு நுழைவுத் தேர்வு மாணவர்களின் கல்வித் தகுதியை முடிவு செய்யாது என்று கல்வியாளர் அனில் சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.
கல்விச் சிந்தனை அரங்கில், கட்டுப்பாடற்ற வகுப்பறை என்ற தலைப்பில் கல்வியாளர் அனில் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.
கல்வியாளர் அனில் சீனிவாசன்:
“முற்பட்ட வகுப்பினருக்கு மட்டுமானது அல்ல கல்வி. ஒரு நுழைவுத் தேர்வு உங்கள் தகுதியை முடிவு செய்யாது. மாறாக முயற்சிதான் உங்களின் திறனை வரையறுக்கும்.
சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வகுப்பறைகள் வட்ட வடிவில் அமைக்கப்பட வேண்டும். வரிசையாக அமர்வதால் முன்வரிசை, பின்வரிசை என பாரபட்சம் ஏற்படுகிறது. ” என்று தெரிவித்தார்.