முகப்பு
தமிழ்நாடு

‘பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்’

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீமதி கேசன் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:12 PM
பகிர்:

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீமதி கேசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.

கல்விச் சிந்தனை அரங்கில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் கல்வியில் பெண்கள் என்ற தலைப்பில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஸ்ரீமதி கேசன் கலந்து கொண்டு பேசினார். 

ஸ்ரீமதி கேசன் பேசியது:

“பெண்களுக்கு விரைவில் திருமணம் முடிக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்தது. ஆனால், தற்போது அதிக பெண்கள் விஞ்ஞானிகளாகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். ஆராய்ச்சிகளில் ஈடுபட பெண்களை ஊக்குவிக்க வேண்டும். 

அக்னி பணியில் தலைமை தாங்கியதற்காக ‘அக்னி புத்ரி’ என்று போற்றப்படும் டெஸ்ஸி தாமஸ், பலருக்கு அறிமுகம் இல்லாதவராகவே இருக்கிறார்.  “இளம் விஞ்ஞானி இந்தியா” போட்டியில் இளம் பெண்கள் சாதனை படைத்தாலும், சில பெற்றோர்கள் தங்கள் மகள்களை அறிவியல் படிப்பை தொடர்வதை தயங்குகிறார்கள். இந்த தயக்கம் சில சமூகங்களில் கலாச்சார விதிமுறைகளிலிருந்து உருவாகிறது. பெண்கள் பாரம்பரியமாக 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் விரைவில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →