படம் | ஏஎன்ஐ
தமிழ்நாடு

வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீடிப்பு

திருநெல்வேலி, சென்னை, மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

திருநெல்வேலி, சென்னை, மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை(ஜூலை 2) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலியிலிருந்து சென்னை வரை வாரந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் திருநெல்வேலி - சென்னை வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 06070), ஜூலை 4 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்வழித்தடத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் சென்னை - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 06069), ஜூலை 5 முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையம் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 06030), ஜூலை 7 முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்வழித்தடத்தில், வாரந்தோறும் திங்கள்கிழமை மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 06029), ஜூலை 8 முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்று கல்வி, உற்பத்தி முறை நாட்டிற்குத் தேவை: ராகுல் காந்தி

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

SCROLL FOR NEXT