விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!
புதுவையில் இருந்து வாங்கி வரப்பட்ட சாராயத்தை அருந்தியதாக முதல்கட்ட தகவல்.
Updated On : 10 ஜூலை, 2024 at 12:53 PM
விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 11 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்ட சாராயத்தை அருந்தியவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், நேற்றுமுதல் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில், புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக வாங்கி வரப்பட்ட சாராயத்தை முண்டியம்பாக்கம் பகுதியில் ஆண்கள் குடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.