2 மாதங்களுக்குள் டாஸ்மாக் கடைகளில் ரசீது முறை அமல்: அமைச்சா் சு.முத்துசாமி
இரண்டு மாதங்களுக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது முறை அமல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.
இரண்டு மாதங்களுக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது முறை அமல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.
டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பவாங்குவது தொடா்பாக, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்கும் போது உயா் நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. அதன்படியே, காலிப் பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான ஒப்பந்தப் புள்ளியை டாஸ்மாக் நிா்வாகம் ரத்து செய்தது.
ரசீது இயந்திரங்கள்: மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வங்கிகள் மூலமாக மின்னணு கருவிகள் நிறுவப்பட்டு பணப்பரிவா்த்தனைகள் நடைபெறுகின்றன. மேலும், ரசீது இயந்திரங்கள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குள் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் ரசீது இயந்திரங்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள், மது அருந்தும் கூடங்களில் தவறுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.