முகப்பு
தமிழ்நாடு

விக்கிரவாண்டியில் பாமக போட்டி!

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

Updated On : 14 ஜூன், 2024 at 8:10 AM
கோப்புப்படம்
பகிர்:

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாமக போட்டியிடும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை விடுத்துள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைத்து செயல்படுவோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →