முகப்பு
தமிழ்நாடு

கள்ளச்சாராய மரணம்: தேமுதிக போராட்டம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைக் கண்டித்து தேமுதிக சார்பில் ஜூன் 25-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Updated On : 21 ஜூன், 2024 at 11:35 AM
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்)
பகிர்:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைக் கண்டித்து தேமுதிக சார்பில் ஜூன் 25 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பு:

திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக (ஜூன் 25) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.

இதில் மாவட்ட கழக செயலாளர்கள், உயர் மட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →