மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா 
தமிழ்நாடு

“தமிழ்க் கடவுள் முருகன் மீது ஆணையாக...”: மயிலாடுதுறை எம்பி பதவியேற்பு

இந்தியாவின் நம்பிக்கைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்க என்று முழக்கமிட்ட சுதா.

Ravivarma.s

தமிழ்க் கடவுள் முருகன் மீது ஆணையாக எனக் குறிப்பிட்டு மயிலாடுதுறை மக்களவை உறுப்பினராக சுதா பதவியேற்றுக் கொண்டார்.

18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நேற்றுமுதல் பதவியேற்று வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் வரிசையாக இன்று பிற்பகல் பதவியேற்றனர்.

அப்போது, அரசியல் சாசனத்தை கையில் ஏந்தியபடி தமிழில் பதவியேற்ற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதா, இறுதியில் தமிழ்க் கடவுள் முருகன் மீது ஆணையாக உறுதி கூறுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழ் மக்கள் வாழ்க, இந்தியாவின் நம்பிக்கைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்க என்று முழக்கமிட்டு பதவியேற்றுக் கொண்டார்.

மேலும், தமிழகத்தை சேர்ந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எம்பிக்களும் அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி தமிழில் எம்பியாக பதவியேற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி ஓடிடி தேதி!

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.880 கோடி சூதாட்டம்..! ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை!

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா!

ஓடிடியில் கண்ணப்பா!

ஓடிடியில் நடிகர் தர்ஷனின் சரண்டர்!

SCROLL FOR NEXT