அமைச்சா் எ.வ.வேலு. 
தமிழ்நாடு

சுங்கச்சாவடி எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடி எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: எ.வ.வேலு

Din

சென்னை: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினா் சிவக்குமாா் பேசியது:

நெடுஞ்சாலைத் துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, சாலை திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள்தான் இருந்தன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 17 சுங்கச்சாவடிகள் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்ததும் சுங்கச்சாவடிகள் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதிகரித்துதான் உள்ளது. குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்றாா்.

அப்போது அமைச்சா் எ.வ.வேலு குறுக்கிட்டுக் கூறியதாவது:

சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாமக உறுப்பினா் கூறுகிறாா். இந்த அதிகரிப்புக்குக் காரணமான மத்திய பாஜக அரசுடன்தான் பாமக தற்போது கூட்டணி அமைத்துள்ளது. மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளைக் குறையுங்கள் என்று மூன்று முறை கடிதம் எழுதியுள்ளோம். பதில் இல்லை. எனினும், தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்றாா் அவா்.

அயோத்தி கோயில் 161 அடி உயர கோபுரத்தில் காவிக்கொடி: நவ. 25-இல் பிரதமா் மோடி ஏற்றுகிறாா்!

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் 192 போ் கைது

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்துள்ளது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT